Pongal 2022

Pongal 2022

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் இயங்கி வரும் நேசக்கரங்கள் ஆதரவு ஏற்போர் மூத்தோர் இல்லத்தில் தமிழர் திருநாளாம் “பொங்கல் திருவிழா” மூத்தோர் இல்ல வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இல்ல தலைவர் செல்லதுரை தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மூத்தோர்களையும் இல்ல பணியாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் இல்ல நிறுவன செயலர் பெரியசாமி வரவேற்று பேசினார். பொங்கல்           பண்டிகையொட்டி அனைத்து மூத்த குடிமக்களுக்கு நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் புத்தாடைகளை இல்ல தலைவர் வழங்கினார். 

   இதில் இல்ல மேலாளர்கள் துரைசாமி,  தெய்வராஜன், இல்ல கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, விடுதி வார்டன் கோமதி, மதன், மகாதேவன், செவிலியர் ஜான்சி,  உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டார்கள். விழாவில் பொங்கல், இனிப்புகள் வழங்கி இல்ல மூத்தோர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மூத்தோர் இல்ல கௌரவ மேலாளர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.